மெட்ரோ ரயிலில் மாணவர்கள் பட்டாகத்தியுடன் பயணிகளை மிரளவைத்த மாணவர்கள்

by Staff / 10-10-2022 11:59:45am
 மெட்ரோ ரயிலில் மாணவர்கள்  பட்டாகத்தியுடன்  பயணிகளை மிரளவைத்த மாணவர்கள்

சென்னை மெட்ரோ ரயிலில் மாணவர்கள் கத்தி, கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இவர்களது அட்டகாசம் குறையவில்லை. இந்நிலையில், மாணவர்கள் பட்டாக்கத்திகளை நடைமேடையில் தேய்த்தபடி செல்வது வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலில் செல்லும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் கும்பலாக நின்றபடி உள்ளனர். அவர்கள் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலையங்களின் நடைமேடையில் மின்சார ரயில் வந்ததும் மாணவர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசி செல்கின்றனர். இதனை கண்டு ரயிலில் இருந்த பயணிகளும், நடைமேடையில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்

 

Tags :

Share via