கூட்டு பலாத்காரம் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி

by Staff / 30-01-2023 12:25:26pm
கூட்டு பலாத்காரம் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி

சத்தீஸ்கரில் 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மூன்று பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து, சிறுமி இதை யாரிடமும் கூறவில்லை. சில நாட்களுக்கு முன், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

 

Tags :

Share via