முதுபெரும் பத்திரிகையாளர் என். கல்யாணசுந்தரம் மறைவு

by Staff / 14-12-2021 02:30:05pm
முதுபெரும் பத்திரிகையாளர்  என். கல்யாணசுந்தரம் மறைவு

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான பெரியவர் 'இந்து' என். கல்யாணசுந்தரம் (86) )நேற்று (13-12-2021) அமெரிக்க , கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். 

மதுரையில் 16.04.1935 அன்று பிறந்த திரு.என். கல்யாணசுந்தரம் 1961 ஜூன் மாதம் தி இந்து நாளிதழில்  நிருபராக இணைந்தார்.39 ஆண்டுகள் பணியாற்றி 2000ஆம் ஆண்டில்  பணி நிறைவு செய்தார்.

இந்து நாளிதழின் அரசியல் செய்தியாளராக சிறப்புற செயல்பட்ட  என்.கல்யாணசுந்தரம் 
தமிழகத்தின்  முதல்வர்களாக இருந்த ராஜாஜி,காமராஜர், மு. கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் மூத்த தலைவர்களுடன் நெருங்கி பழகியவர்.அவர்களது அன்பையும் பெரு மதிப்பைப் பெற்றவர்.என்பது குறிப்பிடத்தக்கது.
:

 

Tags :

Share via