பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது.

by Editor / 18-06-2024 09:32:26am
 பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ்.இவரின் மகன் கணபதி(23). ஆட்டோ டிரைவர்.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் பனப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவி ஒருவரை பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணபதி அந்த சிறுமியிடம் தான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவி நீங்கள் திருமணமானவர் உங்களுக்கு மனைவி உள்ளாரே என்று கூறியுள்ளார்.அதற்கு அந்த வாலிபர் எனக்கு என் மனைவியை பிடிக்கவில்லை உன்னை தான் நான் விரும்புகிறேன் என்று கூறியதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதைதொடர்ந்து அவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மறைவான இடத்திற்கு அந்த சிறுமியை வரவழைத்து ஆசை வார்த்தைகள் கூறி மீண்டும் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமிக்கு கடந்த 3 மாதங்களாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.இதனை கண்ட மாணவியின் தாய் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டரிடம் காட்டியுள்ளார்.அவரை பரிசோதித்த டாக்டர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அழைத்து சென்று சம்பவம் குறித்து நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.நெமிலி ஆய்வாளர் லட்சுமிபதி வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கணபதியை போக்சோவில் கைது செய்து அளித்தார்

 

Tags : பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது.

Share via