நீட்: இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

by Staff / 17-08-2024 04:19:07pm
நீட்: இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

நீட் தேர்வு தோல்வியால் தஞ்சாவூரில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் சவடால் விட்டிருக்கிறார் என அமைச்சர் சிவசங்கர் பதிலடி அளித்துள்ளார். மேலும் அவர், நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும் என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே. ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்துவிட்டு, இன்று மாற்றிப் பேசி வாயை வாடகைக்கு விட்டிருக்கிறாரா பழனிசாமி? என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via