சீவலப்பேரி கோவில் பூசாரி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41) என்பவரை கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் காரணமாக கடந்த 18.04.2021 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் உத்தரவுபடி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர் . இதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொலையில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கொலையில் ஈடுபட்ட சீவலப்பேரி தேரடி தெருவைச் சேர்ந்த இளங்காமணி(42), சீவலப்பேரி காலனி தெருவைச் சேர்ந்த சேகர் (40), மற்றும் பேச்சிகுட்டி (42) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் இன்னும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Tags :