உடன்குடியில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற  ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரிஷ் பறிமுதல்.

by Editor / 15-04-2023 09:12:59pm
உடன்குடியில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற  ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரிஷ் பறிமுதல்.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில்  விலை உயர்ந்த பொருள் வெளிநாட்டிற்கு கடத்த முயல்வதாக  கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குலசேகரப்பட்டினம் போலீசார் உடன்குடி  சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற உடன்குடி புதுமனை பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை  சோதனை செய்ததில்  பிளாஸ்டிக் கவரில் திமிங்கலத்தின் எச்சம் அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அம்பர்கிரிஷை பறிமுதல் செய்து குமரனை பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 2.5கிலோ எடை கொண்ட இந்த அம்பர்கிரீசின் மதிப்பு சுமார் 2.5 கோடி. இதனை அடுத்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறையினரிடம் இந்த அம்பர்கிரிஷ் ஒப்படைக்கப்படது . இந்த அம்பர்கிரிஷ் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.கடந்த 6மாதங்களாக உடன்குடி பகுதியில் 19 கிலோ ஆம்பூர்கிரிஷ் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via