சிகரெட் லைட்டர்கள் பறிமுதல் செய்யப்படும் - அமைச்சர்

by Staff / 10-03-2023 02:33:32pm
சிகரெட் லைட்டர்கள் பறிமுதல் செய்யப்படும் - அமைச்சர்

தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தின் முதல் கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், 'வாரியத்தில் கடந்த மாதம் வரை, 61 ஆயிரத்து, 141 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, சட்ட விரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

 

Tags :

Share via