16 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags :