ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு

by Staff / 12-10-2023 01:27:46pm
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் வடகிழக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் நேற்று இரவு தடம் புரண்டது. இந்த சம்பவத்தில், நான்கு பயணிகள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே துறை  அறிவித்துள்ளது.

. ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பயணக் காப்பீட்டுத் தொகையைப் பெற வாய்ப்புள்ளது. இதற்கு, விபத்து நிகழ்ந்த நாளில் இருந்து நான்கு மாதங்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via