நர்சிங் மாணவி மதுபோதையில் கூட்டு பலாத்காரம்

by Staff / 21-02-2023 11:57:40am
நர்சிங் மாணவி மதுபோதையில் கூட்டு பலாத்காரம்

கேரளாவின் கோழிக்கோட்டில், எர்ணாகுளத்தை சேர்ந்த நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மாணவிக்கு இரண்டு நண்பர்கள் வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்து, கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாணவியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். மாணவிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து, கல்வி நிறுவன அதிகாரிகள் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார். பின்னர் மாணவி புகார் அளித்ததை அடுத்து மொபைல் லொகேஷன் மூலம் குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர்.

 

Tags :

Share via