ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்- பெண் கைது 

by Editor / 24-07-2021 06:54:23pm
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்- பெண் கைது 

 

தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஹலீமா சிஸ் என்ற பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்றும் இது உலக சாதனையாக கருதப்பட்டது என்றும் தகவல் வெளியானது. இந்த தகவலை தென்னாப்பிரிக்கா ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து உலகம் முழுவதும் இந்த செய்தி பரவியது. அந்தப் பெண்ணுக்கு பிறந்த 10 குழந்தைகளில் 3 பெண் குழந்தைகள் என்றும் ஏழு ஆண் குழந்தைகள் என்றும் 10 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.


இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த தனியார் மருத்துவமனை தங்களது மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடக்க வில்லை என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது அவருக்கு பிரசவம் நடந்ததற்கான எந்தவித அறிகுறியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து 10 குழந்தைகள் பெற்றெடுத்ததாக அந்த பெண் பொய் கூறி உள்ளார் என்பதும் தெரிய வந்ததை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் தெரியவந்ததை அடுத்து அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றதாக கூறப்பட்ட நிகழ்வு பொய் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via