குடும்பத்தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 16-12-2022 02:19:30pm
குடும்பத்தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு அதீத குடிப்பழக்கம் இருந்துவந்துள்ளது. இதனால் இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் நேற்று சந்தோஷ் குடித்துவிட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த சந்தோஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via