மோட்டார் சைக்கிள் சென்ற பெண் தவறிவிழுந்து பலி

by Staff / 19-11-2022 03:06:07pm
மோட்டார் சைக்கிள் சென்ற பெண் தவறிவிழுந்து பலி

தூத்துக்குடி மாவட்டம்: கயத்தாறு அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் திடீரென தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து பலியானார். பசுவந்தனை சில்லாங்குளம் கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராஜாத்தேவர். சம்பவத்தன்று இவரும், இவரது மனைவி பார்வதி (வயது 52) கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். திருமலாபுரம் விலக்கில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து பார்வதி நிலைதடுமாறி திடீரென சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கணவர் கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர்  விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று, பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via