ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவு... 30 மாணவிகள் மயக்கம்

by Staff / 19-11-2022 04:07:50pm
ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவு... 30 மாணவிகள் மயக்கம்

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் உள்ள மேற்கு மாரோட்பள்ளியில் கஸ்தூரிபா காந்தி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அனைத்து மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை அப்பகுதியினர் உதவியுடன் பள்ளி ஊழியர்கள் கீதா நர்சிங் ஹோமில் சேர்த்தனர். கல்லூரி எல்லைச் சுவரில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசியதால், மாணவர்கள் நோய்வாய்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via