துப்பாக்கி சூடு 9 மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

by Staff / 26-11-2022 02:08:36pm
துப்பாக்கி சூடு  9 மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

2012 ஆம் ஆண்டு கேரளா கடல் பகுதியில் இத்தாலி கப்பல் படை வீரர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இரண்டு குமரி மீனவர்கள் பலியானார்கள். இத்தாலி அரசு கொல்லப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு தலா நான்கு கோடி ரூபாயும் விசைப்படகு உரிமையாளருக்கு இரண்டு கோடி ரூபாயும் இழப்பீடாக வழங்கியது. இச் சம்பவத்தில் விசைப்படகில் உடன் இருந்த பாதிக்கப்பட்ட சக ஒன்பது குமரி மீனவர்களுக்கும் விசைப்படகு உரிமையாளர் இழப்பீடு வழங்க கோரி தெற்காசிய மீனவர் தோழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் விசைப்படகு உரிமையாளர் திரு பிரெடி தனக்கு கிடைத்த இரண்டு கோடி ரூபாயில் ஒன்பது மீனவர்களுக்கும் தலா ஐந்து லட்ச ரூபாய் வீதம் விசைப்படகு உரிமையாளர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

 

Tags :

Share via