பெட்ரோல் பங்கில் மோதிய லாரி

by Staff / 23-04-2023 01:07:47pm
பெட்ரோல் பங்கில் மோதிய லாரி

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. போர் தாலுகாவில் உள்ள கேத் சிவப்பூரில் உள்ள பெட்ரோல் பம்பிற்கு டீசல் நிரப்ப லாரி ஒன்று சனிக்கிழமை வந்தது. ஆனால், திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி நேராக பெட்ரோல் நிலையத்தின் மீதும், அங்கு ஏற்கனவே நின்றிருந்த காரின் மீதும் மோதியது. அப்போது அருகிலிருந்த நபர் ஓடியதால் நூழிலையில் காயமின்றி உயிர் தப்பினர். இந்த பயங்கர விபத்தில் பெட்ரோல் பம்ப் சேதமடைந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via