5 மாநில தேர்தல் : ரூ.1760 கோடி பறிமுதல்

by Staff / 21-11-2023 11:41:56am
5 மாநில தேர்தல் : ரூ.1760 கோடி பறிமுதல்

ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தலுக்கு சட்டவிரோதமாக பணம், பொருட்கள் எடுத்து சென்றவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிக பட்சமாக தெலங்கானாவில் ரூ.659.2 கோடியும், ராஜஸ்தானில் ரூ.650.7 கோடியும், மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ.323.7 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via