பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்கள் முககவசம் அணிய வேண்டும் - ஜி.கே.வாசன்

by Staff / 04-05-2022 12:43:12pm
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்கள் முககவசம் அணிய வேண்டும் - ஜி.கே.வாசன்

 தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருக்கும் பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் நன்கு தேர்வு எழுதி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நற்பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாணவ, மாணவிகள் அனைவரும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

12, 10 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை மனதில் நன்கு பதிய வைத்து, நன்கு தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்  என்று ஜி.கே.வாசன் கூறிஉள்ளார் .

 

Tags :

Share via