நகராட்சி துணைத்தலைவர் பதவியை கைப்பற்றிய பாஜக
கன்னியாகுமரி மாவட்டம் புராதான நகரமான பத்மநாதபுரம் நகராட்சியின் துணைத் தலைவர் பதவியை இன்று பாஜக கைப்பற்றியது.பத்மநாபபுரம் நகர்மன்ற துணை தலைவராக இருந்த முன்னாள் திமுக நகர செயலாளர் தக்கலை மணி அவர்களின் மறைவால் காலியான நகர்மன்ற துணை தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எட்டு ஓட்டுகளை பெற்ற திமுக தோல்வியடைந்தது.பாஜகவை சார்ந்த நகராட்சி உறுப்பினர் உன்னிகிருஷ்ணன் 12 ஓட்டுகள் பெற்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றி பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :