தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

by Staff / 21-12-2022 05:04:18pm
தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த 18ம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் எல்லை கடந்து மீன் பிடித்ததாக தெரிவித்து தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்க தொடங்கினர். இந்த திடீர் தாக்குதலால் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தும், 12 மீனவர்கள் படுகாயமும் அடைந்தனர்.

 

Tags :

Share via