கள்ளக்காதலி கழுத்தை நெரித்துக்கொலை

by Staff / 28-12-2022 02:40:00pm
கள்ளக்காதலி கழுத்தை நெரித்துக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ரச்சனா (44) தனியார் நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு ரச்சனா பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞரை சந்தித்துள்ளார். அவர்களுக்குள் திருமணத்திற்குப் புறம்பான உறவு உருவாகி உள்ளது. இருவரும் மீரட்டில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இரவு தன்னுடன் தங்க வேண்டும் என கவுதம் ரச்சனாவுடன் தகராறு செய்துள்ளார். அவர் மறுத்ததால் கழுத்தை நெரித்து ரச்சனாவை கொன்றுவிட்டு கவுதம் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கிடைக்கவே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியான கவுதமை கைது செய்தனர். இதுகுறித்து ரச்சனாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via