தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 08-01-2023 01:30:45pm
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த பி என் டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான மணிகண்டன், இவர் ரத்தினபுரி பகுதியில் உள்ள, நவ்ஃபல் லேஅவுட் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது, இவர் எதிர்பார்த்த அளவுக்கு இவரது பிரியாணி கடை விற்பனையாக உள்ள என கூறப்படுகின்றது, இதனால் தொழிலில் நஸ்டம் ஏற்பட்டு, மன உளைச்சலில் காணபட்ட மணிகண்டன் நேற்று வீட்டில் விஷம் அருந்தி மயங்கி விழுந்தார், உடனடியாக இவரது குடும்பத்தினர், இவரை மீட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று உயிரிழந்தார், இது குறித்து இவரது தந்தை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via