தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர்

by Staff / 08-01-2023 01:28:25pm
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சாலையை, சேர்ந்தவர் 27 வயதான அக்ஷய், இவர் கோவையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார், இவர் ஈரோடு பகுதியை சேர்ந்த, அனுதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார், இவர் ஈரோடு பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்ததாக கூறப்படுகின்றது, மேலும் திருமணம் ஆன நாளிலிருந்து கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இதனால் மன விரக்தியில் கானபட்டு வந்த அக்ஷய், தனது அறைக்கு சென்று ஓய்வெடுப்பதற்காக சென்றுள்ளார், ஆனால் நீண்ட நேரமாக, அவரது அறை கதவு, திறக்காததால் இவரது வீட்டிலிருந்த வர்கள், இவரது கதவை உடைத்து உள்ளே பார்த்த பொழுது, அவர் குளியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில், இவரது உரவினர் 38 வயதான வினு கார்த்திக் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via