அரசு,தனியார்பேரூந்து நேருக்கு நேர் மோதல் பெண்காவலர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.

by Editor / 14-02-2023 09:43:31pm
அரசு,தனியார்பேரூந்து நேருக்கு நேர் மோதல் பெண்காவலர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.

தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தென்காசி செல்லுகின்ற தனியார் பேருந்தும் புளியங்குடி அச்சந்தி விலக்கில் நேருக்கு நேர் மோதல்
இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பெண்காவலர் மற்றும் தனலட்சுமி, சண்முகப்பிரியா, முப்புடாதி, மனோஜ் குமார், வாசுதேவநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமைக்காவலர் கனகலட்சுமி, சுப்ரமணியன், அஜித் குமார்,மைதீன் அப்துல் காதர், முத்தம்மாள், ஹேமலதா, சுப்பிரமணியன்,ஆகியோர் படுகாயமடைந்தனர்.சம்பவம் பற்றி கேள்விப்பட்ட புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன்,சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம், அனைத்து மகளிர் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் மாலா, ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.காயம்பட்டவர்கள் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு,தனியார்பேரூந்து நேருக்கு நேர் மோதல் பெண்காவலர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.
 

Tags : பெண்காவலர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.

Share via