சென்னையில் ஆமைகள் காப்பகம்

by Staff / 21-01-2023 01:42:35pm
சென்னையில் ஆமைகள் காப்பகம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆமைகளை பாதுகாக்கும் வைகயில் காப்பகம், மறுவாழ்வு மையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் ஆமைகள் காப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆலிவ் ரெட்லி, கிரீன், லெதர்பேக், ஹாவ்க்ஸ்பில், லோகர்ஹெட் உள்ளிட்ட கடல் ஆமை இனங்களை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கடல் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொரித்து கடலில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via