மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கோவை மாவட்டம் ரத்தினபுரி அருகே உள்ள பழனிசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் 15 வயதான சியாமளா. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :