விபச்சார வழக்கில் பெண்கள் உட்பட 4 பேர் கைது

by Staff / 31-01-2023 11:47:59am
விபச்சார வழக்கில் பெண்கள் உட்பட 4 பேர் கைது

விருதுநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (42), இவரது மனைவி அமல்ராணி‌, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவியாக உள்ளார். தம்பதியினர் விருதுநகர் பேராலி ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் சிவகாசியைச் சேர்ந்த ஹரிபாலகுமார்(24), சாத்தூரைச் சேர்ந்த கற்பகவல்லி (29) ஆகியோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அமல்ராணி, அவரது கணவர் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்தனர்.
 

 

Tags :

Share via