நாளை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

by Editor / 02-02-2023 10:20:47pm
நாளை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை   இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தாது.

இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( 3ம்) தேதி விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் ப. சிதம்பரம் உத்திரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via