பயங்கர சாலை விபத்து - 5 பேர் உடல் நசுங்கி பலி

by Staff / 14-03-2023 12:08:20pm
 பயங்கர சாலை விபத்து - 5 பேர் உடல் நசுங்கி பலி

பீகாரில் பயங்கர சாலை விபத்து நடந்தது. மாதேபுரா என்ற இடத்தில் கங்கை நதியில் புனித நீராடச் சென்ற பக்தர்கள் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. இந்த விபத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சௌசா-உடாகிசுங்கஞ்ச் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

 

Tags :

Share via