கஞ்சா எண்ணெய் கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

by Staff / 18-04-2023 04:47:27pm
கஞ்சா எண்ணெய் கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஆந்திராவில் இருந்து காரில் சென்னைக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் கேரள இளைஞர்கள் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அதில் 4 பாட்டில்களில் கஞ்சா எண்ணெய் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 4லிட்டர் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்த செங்குன்றம் போலீசார் அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த ஆதில்மோன், அஜில் சத்யன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் இருவருக்கு 10ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 1லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

 

Tags :

Share via