ஃப்ரெடி புயல் 100 பேர் பலி

by Staff / 14-03-2023 12:12:50pm
ஃப்ரெடி புயல்  100 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மலாவியில் ஃப்ரெடி புயல் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த புயலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த ஃப்ரெடி புயல் மலாவியை தாக்கியுள்ளது. பலத்த புயல் காரணமாக அனைத்து இடங்களிலும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இந்த வெள்ளத்தில் சில மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் இந்த இயற்கை சீற்றத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் வெளியேற வழியின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலைகுலைந்து உள்ளனர்.

 

Tags :

Share via