பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்...
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் அருகே ஒரு பெண் நடந்து சென்றபோது அந்த பெண்னை சிலர் காரில் கடத்தி செல்வதாக காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் வந்தது.
அண்ணாநகர் காவல் நிலைய க்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து செல்லுமாறு கேட்டுகொண்டனர். சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் செண்பக தோப்பிற்கு சென்றபோது, கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இருக்கின்ற ரவுடி குருவி விஜய் மற்றும் கார்த்திக் ஒரு பெண்னை கற்பழிக்க முயன்று இருக்கிறார்கள்.
அவர்களை கைது செய்யமுயன்ற போலீசாரை ரவுடிகள் கட்டை, கற்களை வைத்து தாக்கி இருக்கிறார்கள்.
தத்ங்களை பாதுகாத்துக்கொள்ள சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து குருவி காலில் சுட்டார்.. போலீசார் சுட்டதில் , கீழே விழுந்த விஜயை சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Tags :