விமான நிலையத்தில் 24 பிச்சைக்காரர்கள் கைது

by Staff / 03-10-2023 11:16:43am
விமான நிலையத்தில் 24 பிச்சைக்காரர்கள் கைது

பாகிஸ்தானில் இருந்து பிச்சை எடுப்பவர்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருவது தெரிந்த விஷயம் தான். சமீபத்தில், இந்தப் பிரச்னையைக் குறிப்பிட்டு, தங்கள் நாட்டுக்கு யாத்ரீகர்கள் என்ற பெயரில் வரும் பிச்சைக்காரர்களை கைது செய்யுமாறு பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா புகார் அளித்துள்ளது. இதனை அடுத்து முல்தான் விமான நிலையத்தில் பயணிக்க தயாராக இருந்த 24 பிச்சைக்காரர்களை பாகிஸ்தான் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது மட்டும் இல்லாமல் இந்த சம்பவத்தை பாகிஸ்தான் செனட் கமிட்டி உறுதிப்படுத்தியது.

 

Tags :

Share via