மதுக்கடை முன் ரத்தம் சொட்ட சொட்ட... இளைஞர் தர்ணா

by Staff / 14-03-2023 12:24:02pm
 மதுக்கடை முன் ரத்தம் சொட்ட சொட்ட... இளைஞர் தர்ணா

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள அரசு மதுக்கடை பாரில் 4 இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது கஸ்பா ராஜா என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதாம் உசேன் என்பவரின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சதாம் உசேன், தன்னை குத்தியவரை கைது செய்யக்கோரி மதுக்கடை முன் தர்ணாவில் ஈடுபட்டார். ரத்தம் சொட்ட சொட்ட அவர் தர்ணா செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories