பாஜக தாக்கல் செய்த வழக்கில் இணைந்த திமுக கூட்டணி கட்சிகள்

by Editor / 03-07-2021 07:04:20pm
பாஜக தாக்கல் செய்த வழக்கில்  இணைந்த  திமுக கூட்டணி கட்சிகள்

நீட் பாதிப்பு ஆய்வுக் குழுவை எதிர்த்த பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதிமுக, சிபிஐ, திராவிடர் கழகம் கி.வீரமணி, பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக பொது செயலாளர் கரு. நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையிலும், அதில் தமிழக அரசு முடிவெடுக்காத நிலையிலும் அந்த குழுவை எதிர்த்த கரு.நாகராஜன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திராவிடர் கழக வீரமணி தாக்கல் செய்த மனுவில் குழு அறிக்கை அளிக்கும்பட்சத்தில் அதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தெரியாமல், முன் கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தமிழக மக்களின் ஆட்சேபங்கள் மற்றும் சட்டமன்றத்தின் விருப்பத்துக்கு முரணாக நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via