கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி
பாகிஸ்தானில் பயங்கர விபத்து நடந்துள்ளது. பாகிஸ்தானின் கல்கர்ஹர் சால்ட் ரேஞ்ச் பகுதியில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். எனினும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பேருந்தின் பிரேக் பழுதடைந்தமையினால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags :