கட்டிலுக்கு அடியில் இருந்த பெண்ணின் சடலம்

by Staff / 22-03-2023 11:14:23am
  கட்டிலுக்கு அடியில் இருந்த பெண்ணின் சடலம்

கேரளாவின் இடுக்கியில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்தவர் காஞ்சியாரில் உள்ள பேழும்கண்டத்தைச் சேர்ந்த ஆசிரியை பி.ஜே.வல்சம்மா (எ) அனிமோல் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் தேதி அந்தப் பெண் காணாமல் போனார். அவரது கணவர் விஜேஷ், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடந்த நிலையில், அவரது உடல் வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் கட்டிலுக்கு அடியில், போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில் அவரது கணவர் விஜேஷ் தலைமறைவாகி உள்ளார்.
 

 

Tags :

Share via