அதிமுக புதிய துணை நிர்வாகிகள் நியமனம்
அதிமுகவின் புதிய துணை நிர்வாகிகளை நியமித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி
இணைச் செயலாளர் - S. முகமது ரபி (எ) S.M. ரபீக் (ராயல் கார்டன் 7-வது தெரு, கருப்பாயூரணி, மதுரை மாநகர் மாவட்டம்)
கழக மாணவர் அணி
துணைச் செயலாளர் - A., பழனி, B.A., B.L., (சென்னை மாநகராட்சி நிலைக் குழு முன்னாள் தலைவர்,தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் )
கட்சி சிறுபான்மையினர் நலப் பிரிவு:
துணைச் செயலாளர் - ஒய். ஜவஹர் அலி, B.Com., (கட்சி செய்தித் தொடர்பாளர், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் )
கட்சி உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்",. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Tags :