பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு

by Staff / 28-01-2023 03:43:32pm
பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்றால் மட்டுமே ஓபிஎஸ் அணி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள ஜேசிடி பிரபாகர், பாஜக போட்டி என அறிவித்தால் அவர்களின் வேட்பாளரை ஆதரிக்க தயாராக இருக்கிறோம். பாஜக வேட்பாளரை அறிவித்தால் அவருக்காக பிரசாரம் செய்யவும் தேர்தல் பணிக்குழு போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via