ஆன்லைன் சூதாட்டத்தால் மனைவி தற்கொலை 13 பேர் மீது வழக்கு

by Staff / 26-03-2024 03:26:41pm
ஆன்லைன்  சூதாட்டத்தால் மனைவி தற்கொலை  13 பேர் மீது வழக்கு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சூதாட்டத்தால் ஒரு குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. தர்ஷன் என்ற நபர் ஆன்லைன் பெட்டிங் சூதாட்டத்தில் ரூ. 1.5 கோடி பந்தயம் கட்டி விளையாடியுள்ளார். இதனால் அவர் கடனில் மூழ்கினார். கடன் கொடுத்தவர்கள் அவரது குடும்பத்துக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் தர்ஷனின் மனைவி ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டார். கடனை கட்டாவிட்டால் அவதூறாகப் பேசுவோம் என கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதாக அவர் தனது தற்கொலைக் கடிதத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாகபோலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via