ஒரு வீட்டுக்கு 2 நாய்கள்தான் அனுமதி

by Staff / 28-01-2023 03:45:37pm
ஒரு வீட்டுக்கு 2 நாய்கள்தான் அனுமதி

கேரளாவில் ஒரு வீட்டில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கூடுதலாக நாய் வளர்க்க, தனியாக பணம் செலுத்தி லைசன்ஸ் பெற வேண்டும் என்றும் கட்டுப்பாடு வளர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.1000, ரூ.750, ரூ.500 என வசூலிக்கவுள்ளதாகவும், அரசிடம் உரிய அனுமதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via