வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. பதைபதைக்கும் காட்சி

by Staff / 02-05-2023 04:43:55pm
வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. பதைபதைக்கும் காட்சி

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சம்பல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கைலா தேவி சரணாலயத்தின் கரன்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டது. வெள்ள ஓடையின் நடுவே 4 மணி நேரம் அவர்கள் சிக்கித்தவித்தனர். இறுதியில், அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் அவர்களை மீட்டனர். இந்த மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via