கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிகல்லூரி மாணவன் உயிரிழப்பு.

by Staff / 02-05-2023 04:49:51pm
கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிகல்லூரி மாணவன் உயிரிழப்பு.

திருச்சி, தென்னூர், 9 சி பிளாக், அண்ணா நகரை சேர்ந்தவர்  ஜியாவுல் ஹக் மகன் முகமது முகசின் (18). இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிஏ ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.   அவரது நண்பர் சாகித்துடன் கல்லணை சுற்றி பார்க்க வந்தாராம். அப்போது கொள்ளிடம் ஆற்றில் ஆஞ்சநேயர் கோயில் அருகே குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்தினர்  அவரது உடலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஜியாவுல்ஹக் தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ஐயாபிள்ளை வழக்குப்பதிந்து, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
 

 

Tags :

Share via