கூடங்குளம் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்கான மின் உற்பத்தி நிறுத்தம் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்

by Editor / 25-07-2022 12:32:12pm
கூடங்குளம் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்கான மின் உற்பத்தி நிறுத்தம் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்

கூடங்குளம் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்கான நேற்று இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நிறைவு பெற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் நிறைவு பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via