திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
அறுபடைவீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூரில் கந்தசஷ்டிவிழாவின் ஆறாம் நாளான இன்று சூரனை முருகபெருமான் தம் வேலால் தலையைக்கொய்து,உடம்பை செங்குத்தாக இரண்டாகப்பிளந்து வதம் செய்யும் சூரசம்ஹாரம்மாலையில் தொடங்கியது.இத்தெய்வீக திருவிளைவைகாண திருநெல்வேலி,தூத்துக்குடி,தென்காசி என அருகில் உள்ளமாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைதந்து சூரசம்ஹாரத்தை கண்டுகளித்தனர்.அலைகடலையின் சப்தங்களைவிட வேல்..வேல்..வெற்றி...முருகனுக்கு அரோகரோ கோஸ ஒலிகளே..பக்தியின் வெளிப்பாடாக உணர்ச்சிகரஒலி எதிரொலித்தது.
Tags :