ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

by Editor / 12-10-2021 04:10:26pm
ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.


தொடர்ந்து  ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று தவீரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பயங்கராதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories