நீட் தேர்வு வழக்கு; சுப்ரீம் கோர்ட்.தள்ளுபடி செய்தது

by Editor / 06-09-2021 05:28:10pm
நீட் தேர்வு வழக்கு;  சுப்ரீம் கோர்ட்.தள்ளுபடி செய்தது

செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வின் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. அன்றைய தினத்தன்று வேறு சில தேர்வுகள் நடைபெற இருப்பதால், நீட் தேர்வு நடைபெறும் தேதியை ஒத்திவைக்க கோரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு தேதி பிரச்னைக்குரியதாக இருப்பதால், தேதியை மாற்ற முடியாது.

16 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த நீட் தேர்வை, இந்தக் காரணத்துக்காக ஒத்திவைக்க முடியாது. திட்டமிட்டப்படி நீட் தேர்வுகள் நடைபெறும்' என கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via