இலங்கையின் நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம்

by Staff / 07-05-2022 03:25:08pm
இலங்கையின் நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம்

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது கொடுக்க ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது பிடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்கான பிரதான சாலையை மறித்து மாணவர்கள் 24 மணி நேரம் தொடர் போராட்டத்தை நடத்தினர் இதனிடையே தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. துறைமுகம் தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள் பெருவாரியாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர் இதனால் கொழும்பில் இயல்பு வாழ்க்கை முடங்கியது ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறைகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது போராட்டங்கள் வலுப்பெற்று வருவதை அடுத்து அதிபர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

 

Tags :

Share via