போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி
சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் உள்ளார். இவர் இன்று பணியிலிருந்தபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனே அவரை சக காவல்துறை அதிகாரிகள், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.சங்கர் ஜிவால் ஐபிஎஸ், மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தபோது, ``மதியம் சாப்பிட்டு விட்டு பணியிலிருந்தபோது கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை காரிலேயே ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவருக்கு ஏற்பட்டது லேசான நெஞ்சுவலி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்குள் தகவலைக் கேள்விபட்டதும் காவல்துறை உயரதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து கமிஷனரின் நலம் குறித்து விசாரித்தனர். அவரின் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்" என்றனர்.
Tags :